பவள விழா காணும் சித்தப்பா ...................
பிறந்த நாள் வாழ்த்து
----------------------------------------
அன்புக்கு அழகான சித்தப்பாவே ! நீவிர்
மாசிலாமணியின் கார்மேகக் கருவாகி
காசியம்மாவின் கருவறையில் உருவாகி
மாண்புமிக்க மகனாய் பிறந்திட்டீர்
மனிதரில் மாணிக்கம் தான் நீவிர் ----------------------வாழ்க வளமுடன்.
அன்பெனும் சோலையில் வலம்வருவீர் என்பதால்
அன்பழகன் என்று பெயரிட்டனரோ !
அவர்களையும் வணங்குகிறோம் !
திக்கெட்டும் உன்புகழ் நிலைத்து நிற்க
திலகவதியாரை கைபிடித்தீரோ !
செந்தமிழை வாழவைக்க சிங்கராச்
சென்னையைவிட்டு சிங்கை சென்றீரோ ! ----------வாழ்க வளமுடன்.
திரைகடல் கடந்து சென்றும் ஓய்வில்லாது
பைந்தமிழ் செழிக்க படைப்புகள் பல படைத்தீரோ !
எத்திசை சென்றாலும் எல்லோர் மனதிலும்
நீங்கா இடம்பிடித்தது உமது சமூக சேவையோ ! ---- வாழ்க வளமுடன்.
முகத்தின் இருகண்கள் போல நீங்கள்
ஈன்றெடுத்த இரு செல்வதேவங்களோடும்
இன்பத்தை அள்ளித்தரும் இனிய இன்பாவோடும்
சுற்றத்தோடும் , நட்போடும் , பூரணநலத்தோடும்
என்றென்றும் பல்லாண்டு வாழ்க வளமுடன்..
வாழ்த்த வயதில்லை வணங்கி நிற்கும் ------------------வாழ்க வளமுடன்.
வளர்பிறை குமாரசாமி குடும்பத்தினர் , சென்னை